world

உலகச் செய்திகள்

புதிய உருமாறி “ஒ” வைரசை எதிர்கொள்ளும் வகையில் தடுப்பூசியைத் தயாரிக்கும் பணியில் கியூபா இறங்கியுள்ளது. பயோகியூபாபார்மா என்ற நிறுவனம் இதற்கான ஆய்வைத் துவக்கி விட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிறுவனத்தின் தலைவர் எட்வர்டோ மார்டினஸ், “தேவைப்பட்டால் மிகக்குறைந்த நாட்களில் தடுப்பூசியைத் தயாரிப்போம்” என்று கூறியுள்ளார்.

 

ஏராளமான மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளால் திணறிப் போயிருக்கும் பிரிட்டனின் ஆளும் வலதுசாரி கன்சர்வேடிவ் கட்சி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறது. தெற்கு லண்டனில் உள்ள பெக்ஸ்லி என்ற தொகுதிக்கான தேர்தலில் அக்கட்சி வேட்பாளர் லூயி பிரெஞ்ச் 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். ஆனால் 2019 ஆம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் 19 ஆயிரம் வாக்குகளைப் பெற்ற ஆளும்கட்சி, தற்போது 11 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.

 

இஸ்ரேல் நடத்தி வரும் கொடூரமான தாக்குதல்களுக்கு இடையில் பாலஸ்தீன ஆசிரியர்கள் புதுமையான பயிற்றுவித்தல் முறைகளைக் கையாண்டு வருகிறார்கள். மாணவர்களோடு கலந்து உரையாடக்கூடிய ரோபோக்களை உருவாக்கி மாணவர்களின் கவனத்தை பாடங்கள் மீது பதியுமாறு செய்திருக்கிறார்கள். சில ஆசிரியர்கள் இணைந்து இரண்டு மாதங்களில் இந்த ரோபோக்களை உருவாக்கியுள்ளனர்.